உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Saturday, November 5, 2011
Tuesday, October 4, 2011
Wednesday, August 31, 2011
*^ காதல் அணுக்கள் ^*
Sunday, August 28, 2011
~*நம் கடிகாரம் *~
Sunday, August 7, 2011
குழந்தை இவள் ....
Thursday, June 2, 2011
ஆட்சி
Monday, May 30, 2011
ரசித்தேன்
Monday, April 25, 2011
சும்மா
Friday, March 11, 2011
என்னுள் அவன்
சிறு ஓரப் பார்வை விட்டு சிலிர்ப்பூட்டி
வீழ்த்தி செல்வாய்
தெரியாமல் பார்க்கும் போதும்
மெதுவான சிரிப்பில் அணைப்பாய்
சேட்டைகள் காட்டி செல்லும்
என் பிறக்காத சேயை
அருகிருந்து கொஞ்சி
நான் இரசிக்க வேண்டும்
விரல் இட்டுச் செல்லும் கோலங்கள்
ரங்கோலியாய் அல்ல
புள்ளிக் கோலங்களாய் நீ மட்டும்
அறிந்த அடையாளங்களாக
இவள் உணர்வுகளுடன் சத்தமின்றி மறைகின்றன
Sunday, March 6, 2011
அவன் நிழல்
வெயில் இல்லா காலத்து நிழல் போல
என்றும் இவள் கண்ணெதிரில்
தெரிந்தும் தெரியாமலும்
மறைந்து விளையாடுகிறாய்
என்னடா குறும்பு இது .
உன் நிழலாய் மாறிவிட்ட இவளிடம்
இனி என்ன மறைந்து விளையாட்டு
இமையாத சூரியனின்
துணையோடு வந்துவிடு
மழைக்காலம் உண்டெனில்
வானவில்லை அழைத்துவிடு
என்றும் இவள் கண்ணெதிரில்
தெரிந்தும் தெரியாமலும்
மறைந்து விளையாடுகிறாய்
என்னடா குறும்பு இது .
உன் நிழலாய் மாறிவிட்ட இவளிடம்
இனி என்ன மறைந்து விளையாட்டு
இமையாத சூரியனின்
துணையோடு வந்துவிடு
மழைக்காலம் உண்டெனில்
வானவில்லை அழைத்துவிடு
Wednesday, February 23, 2011
என் சொந்தம்
எனக்கான உறவொன்று என சுயநலமாய்
தேடிக் களைத்த தருணம் ,
நட்பாய் உன் அறிமுகம் மறக்க முடிந்த அல்ல
அத்தனையும் மறக்க மறுத்த வார்த்தைகள்.
தேனாய் அல்ல முட்களாய் குற்றிய சொற்கள்,
சிறிது சிறிதாய் இதயத் திரையை கிழித்தெறிந்தன.
முடிவுக்காக பல காலம் யோசிக்க வைத்த
உன் காதலின் வெளிப்பாடு ,
உன் பிரிவின் வேதனை அறியாமலே
யோசிப்பதாய் கழிந்தது காலம்,
தெரியாமலே உன்னால் கரைந்த இவள் மனம்
ஒரு பொழுதில் எதிர்பாராமல் குறுக்கிட்டது
"நீ அவனை காதலிக்கின்றாய் " என்று
அன்று பிரிவின் வலி அறியாமல்
கழிந்தன நாட்கள்,
இன்று பிரிவின் ரணம் உணர்வதால்
நகர மறுக்கின்றன நொடிகள்.
Saturday, February 12, 2011
காதலர் தினம்
Monday, January 31, 2011
உன்னிடம்
Thursday, January 27, 2011
நீ தான் என் பரிசு
விட்டுச் சென்ற வார்த்தைகளால்
நித்தம் நித்தம் இவளை
கொத்திச் செல்லும் வித்தைகள்
எனக்கும் கற்றுத் தருவாயா
உன்னை மீண்டும் மீண்டும்
தீண்டத் துடிக்கும் இவள்
விரல்களை சற்று வந்து செல்ல
வரம் கொடுப்பாயா
உன் காதலில் மூழ்கிவிடும் இவளை
மீண்டு வர விடாமல் செய்யும்
உன் செல்ல சேட்டைகள்
இன்னும் இன்னும் தருவாயா
உன்னிடம் கேட்கும் அத்தனை
வேண்டுகோளுக்கும் பரிசளித்துவிடு
உன் ஸ்பரிசங்களை மீண்டும் பிரியவே
முடியா முடிவிலிக் காலம் வரை
Sunday, January 16, 2011
~ <பகிர்வு> ~
நம் பிரிவின் ரணம் தாங்குவேனடா ஆனால் நம் பேச்சுக்குள்ளும் நினைவுக்குள்ளும் வந்து போகும் பிரிவின் தடங்களின் அழுத்தத்தை தாங்க தான் முடிவதில்லை ... நல்ல வேலை இந்த கணனி யுகத்தில் கற்பனைக்கு எட்டாத தொடர்பாடல் முறைகள் வந்தது இல்லையெண்டால் இப்பொழுது இந்த உயிர் உன்னுடன் இருந்திருக்கும் உடலற்ற ஒரு நினைவாக மட்டும் ...
தெரியல டா நீ என்னில் என்ன செய்தாய் என்று ஆனால் ஒன்று தெரியும் நீ இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ....
ம்ம்ம் வழமை போல நம்மை இணைக்கும் அந்த உயிரில்லா கருவிக்கு முன் நான் நீ வந்ததும் நமக்குள் இந்த கணனி இருப்பதே மறந்துவிடும் அளவிற்கு உன் நெருக்கம் என்னிடத்தில் ...
நம்ம கனவுகளை மட்டும் யாராலையும் புரிஞ்சு கொள்ளவே முடியாது டா காரணம் இவை உறக்கத்தின் வெளிப்பாடா மட்டுமில்லாமல் நாம் வாழத் துடிக்கும் நனவுகளுக்கான பாதையை காட்டிச் செல்வதால் , தினம் தோறும் நீ "நேற்று என்ன கனவு வந்தது"னு கேட்கும் போது சொல்வதர்க்ககவே நித்திரையின் படிகளுக்கு கட்டளையிட்டு தொடர்கின்றேன் ...
இப்படி எனக்குள்ள எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி டா ஒன்னும் தெரியாத போலவே இருக்க முடியுது உங்களால ....
Saturday, January 15, 2011
நினைவுப்பகிர்வு
இன்றைக்கு பதிவிடணும்னு தோணுது ஆனா கவிதை இல்லை என்னவனை சந்தித்த நாளின் சந்தோஷப் பகிர்வு ....
அனைவருக்கும் தைத்திருநாள் புத்தாண்டின் வரவேற்பு நிகழ்வு ,எனக்கு என்னவனை என்னுள் வரவேற்ற முதல் நாளின் சந்தோஷ குதுகலிப்பு ..
எங்கிருந்து வந்தயடானு அடிக்கடி கேட்பேன் இதுக்கு பதில் உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனாலும் உன் பதில் என்னை மயங்க வைக்கும் "எல்லாம் நமக்குள்ள இருக்குற வேவ்ஸ் தாண்டி " னு சொல்லி எப்படியோ சீரியஸ் மைண்டையும் வெட்கப்பட வச்சுடுவீங்க ......
என்னவோ யாராலயும் முடியாத ஒரு விஷயம் உன்னால முடியுது என்னதான் நான் சிரிக்க மாட்டேனு அடம் பிடிச்சாலும் எதோ பண்ணி சிரிக்க வச்சுட்டு "நீ சிரிச்ச தானடி நான் சந்தோஷமா இருப்பேன் " னு சொன்ன பிறகும் எப்படி டா நம்ம இடைவேளிய தாங்குவேன் ....
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் உன்னுடன் நான் ரசித்த நொடிகளை ஆனா அத எல்லாம் உங்க கூட கதைகுறபபோ சொல்லுறன் சீக்கிரம் வந்துடுங்க என்ன .........................
Subscribe to:
Posts (Atom)