உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, May 20, 2012

பாடல் வரி


விளையாட்டாக ஒரு பாடல் வரி அவனோட இருக்கையில்
என்னையறியாமல் முனகலாக வெளிப்பட்டது ....
"அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா " என்று
அவன் பதில் நான் சற்றும் எதிர்பாராத கவி வரிகளாக
"கண் என்னடி அடிக்கடி சிமிட்டி உன்னை சிலிர்க்க செய்யும் ,
எந்த சத்தமோ ஒலியோ இல்லாத என் இதயத்தில் ஒரு இடம் .... அல்ல
மொத்தமாகவே தந்துவிட்டேனடி நீ உறங்க " என நீ சொல்லி முடிக்க,
வார்த்தைகள் அல்ல சில துளி கண்ணீர் மட்டுமே விழியோரம் அடைக்கலம் வந்தது

Friday, May 18, 2012

நான் அறியாத உண்மை


காதலில் கற்றுக்கொள்ள
ஒன்றுமே இல்லை
நீ இடாத கட்டளைகளை
நிறைவேற்றுபவளாய் நானும்,
நீ எழுப்பாத கேள்விகளுக்கு
பாதிலாய் என் சொற்களும்,
உன் அனைத்து சொந்தமுமாய்
இடைவெளியின்றி நானும்,
உன்னை முழுவதுமாய் புரிந்தவளாய்
இருந்து விட்டால் ....

Sunday, May 13, 2012

முதல் கோபம்




உன் கோபங்களுக்கு
நான் காரணமாய் அமைந்து விடக்
கூடாதென பல தடவை முயற்சித்திருக்கின்றேன்
ஆனால்
யோசிக்க மறந்த ரணங்கள் கற்றுக்கொடுத்தது
உன் கோபங்களுக்கு அல்ல உன் காயங்களுக்கு
நான் காரணமாய் அமைந்து விடக்கூடாது என்று ....
மன்னிப்பாயா என்னவனே .....

Friday, May 4, 2012

ஸ்மைல் :))))))




ஹே ஹே எங்க ஓட பாக்குற ..... நீ எங்க போனாலும் விட மாட்டேன் ... ஏன்னா நான் பூனைகுட்டி இல்ல மனிதக்குட்டி ... ஹா ஹா ஹா



அடடா என்னை facebook ல tag பண்ண சொன்னத எங்க அண்ணா தப்ப புரிஞ்சுகொண்டானே ....




அட யாரு பா அது... படிக்குற மாதிரி நடிக்குற நேரத்துல குழப்புறது .............