
* நிலவொளியில் தனிமையில் இருக்கிறேன்
எதையோ இழந்தவள் போல் தவிக்கிறேன் காற்று தீண்டும் போது
தான் உணர்கிறேன் இழந்தது என் மனதை என்று................
*தாயை கண்டு உணர்கிறேன் தாய்மையை
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை .............
*காற்றே அவசரம் இல்லை என்னவனை
வேதனைப்படுத்தாது சுவாசமாக மாறிச் செல்
செல்லும் வழியில் அவன் மனதில் நான் இருக்கிறேனா
பார்த்து வந்து சொல்...................
*வாழ்வு உனக்கு சொந்தம் என சுதந்திர எண்ணம் சொல்ல
கண்மூடும் நொடிகூட எனக்கு சொந்தமற்றதாகிவிட்டது - ஏனோ
என் உயிரின் உயில் உன்னிடத்தில் என்பதாலோ .................
காதலின் சின்னம் வலையில் எங்கும்.... உங்களின் அன்பை உலகத்திற்கு காட்டிக்கொண்டு...
ReplyDelete