உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Monday, November 22, 2010

ஆம்



நாம் வித்தியசமானவர்கள் தான்
இரவின் துணையில் கைக்கோர்த்து
நடப்பதில்லை
நொடிக்கொரு தடவை ஸ்பரிசங்களால்
செத்துப் பிழைப்பதில்லை
கடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர
நடப்பதில்லை
உனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக
ஊட்டிக்கொண்டு சாப்பிடுவதுமில்லை

உன்னை சீண்டும் கரங்கள் இன்று
கனவில் மட்டுமே எனக்கு சொந்தம்
கண்டங்களால் மலைகளால் கடலால்
நாம் பிரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்
இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்வதாயில்லை
நினைவுகளாலும் தூய்மையான அன்பாலும்
வாழ்ந்துகொண்டிருக்கும் நம் காதலால்
நாம் வித்தியாசமானவர்கள் தான்

9 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது...

    உங்கள் தளத்தின் பின்புற அமைப்பை சற்று மாற்றி வைத்தால் நலமாக இருக்கும் என்பது என் எண்ணம்...

    தொடரட்டும் உங்கள் சேவை..!

    ReplyDelete
  2. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு இந்து.
    பத்தி பத்தியாக எழ்தாமல் கவிதைபோல் வெட்டி எழுதுங்கள்... இன்னும் நல்லா இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தமிழ்மணம், இண்ட்லி போன்ற திரட்டிகளில் இணையுங்கள். அதிக வாசிப்பாளர்களைப் பெறலாம்.

    ReplyDelete
  4. மோகன்
    மிக்க நன்றிங்க உங்க பாராட்டுக்கு
    மாற்றி அமைக்க முயசிக்குறேன் :)

    ReplyDelete
  5. குமார்
    நன்றி இனி அப்படியே எழுதுறேனுங்க தோழரே
    உங்கள் அறிவுரைக்கும் வருகைக்கும் மிக்க மிகக் நன்றி
    எப்பவுமே நீங்க உங்க கருத்துரைகளை போடுறது உதவியா இருக்கு :)

    ReplyDelete
  6. மிக நன்றாக உள்ளது!

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது. உங்க டெம்ப்ளேட் ரொம்ப அகல கம்மியா இருக்கு. வர ஒரு டெம்ப்ளேட் போடுங்கள். திரட்டிகளில் இணையுங்கள் வாழ்த்துக்கள் .

    remove word verification and keep moderation

    ReplyDelete
  8. கவிதை நன்றாக உள்ளது. தொடருங்கள்!

    ReplyDelete
  9. @ LK நன்றிங்க தவறுகளை திருத்துகிறேன்
    @ தேவன் மிக்க நன்றிங்க

    ReplyDelete