இதயத்தின் நான்கு அறைகள் போதவில்லையடா உன் நினைவுகளை சேமித்து வைக்கவும் உன் மீதான அன்பை தேக்கி வைக்கவும் விரைவில் என்னை வந்து சேர்ந்துவிடு இல்லையேல்-நாளுக்கு நாள் அதிகரிக்கும் உன் மீதான காதல் நிரம்பிய என் இதயம் நீ வரும் போது வெடித்து - உன் காலடி மண்ணாக இருந்தாலும் ஆச்சரியமில்லை
நீ என்னை விட்டு மிகத் தொலைவில் இருக்கின்றாயாம் - இல்லையே அன்று எனக்கு காய்ச்சல் உன் மடியில் தலை சாய்த்திருக்கும் போது நீ தானே இப்ப எப்படி மா இருக்கு என்று என் தலை கோதினாய்.........................