உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, April 1, 2012

நீ கேட்ட நான்


காத்திருந்த நொடிகள் பலவாக இருந்தாலும்
எதிர்பார்த்த சொற்கள் வேறாக இருந்த நாட்கள் அவை ...
என் நண்பனாக அறிமுகமில்லாதவனாய்
எனக்குள் அறிமுகம் தந்தாய்...
நேற்று கடந்த நிகழ்வுகளையும் நாளைக்கான
கனவுகளையும் சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினேன் ...
நீயும் அறியாமல் எனை இழுத்துக் கொண்டாய் ...
நட்பெனும் பாதையில் விரல் கோர்த்து கொண்டேன்
முன்னோடியாக நின்று எனை கூட்டிச் செல்வான் என் நண்பன் என்று...
இந்த உறவை நட்பெனும் கட்டத்திலிருந்து
உயிர் உறவாக மாற்ற அடி எடுத்து வைத்த நாள் ...
என்னை காதலியாக கேட்கவில்லை உன் சொற்கள் ...
உன்னை என் துணைவியாக தருவாயா என்று
நீ கேட்ட நொடி புதிதாக இருந்ததடா ....
புரியாத எண்ணங்களோடு தொலைதூர தேசத்திற்கு
உன்னை பயணிக்க அனுப்பி வைத்தேன் ...
கூடவே என் இதயத்தையும் தான் ....

No comments:

Post a Comment