உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Wednesday, March 14, 2012
என் முதல் குழந்தை
அறியாத சொற்களை தேடி பயணிக்கின்றேன்
உனக்காக கவி வடிக்க
கண்மணி உருட்டலில் ஆயிரம் உணர்வுகளை
உணர்த்திவிடுகின்றாய் சிற் சிற் ஹைக்கூகளாய் ...
நன்றாக பேசத் தெரிந்தவன் டா நீ ...
எவ்வளவு முயற்சித்தாலும் என் அத்தனை
கோபக் கணைகளையும் எளிதில் உன் விழி ஓரச் சிரிப்பில்
பாதி தூரத்திலேயே சிதைத்து விடுகின்றாய் ....
என் முதல் குழந்தையே உன் மழலைத் தனத்திற்கு
நம் குழந்தை கூட போட்டியாகி விட முடியாது ....
Labels:
என்னவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment