
என் மௌனத்தின் மொழிகளை
புரிந்து கொண்டது உன் இதயம்
என் கண்களின் தேடலை
முடித்துவைத்தன உன் பிரசன்னம்
என் பயணத்தில் முட்களை
மறைத்து எடுத்தன உன் கைகள்
என் கனவுகளின் நிறத்தை
என்னோட ரசித்தன உன் கண்கள்
ஆனால் இவை அறிந்தும்
உன்னை வதைக்கின்றன என் செயல்கள்
இருந்தும் என்னை தாங்கும் உன் உள்ளங்கைகளுக்கு
என்றும் இவள் அடிமை
கவிதை உங்களுக்கு வசப்பட்டுவிட்டது.
ReplyDeleteஅருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
en anaiththu pathivilum ungal vazhthu ennai inum utchaagapaduthugindrathu.. mikka nandri :)
Delete