உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Friday, March 15, 2013

இன்மை

உன் இன்மை உணரும் போது
என் ரசனைகளும் துவண்டுவிடுகின்றன
சொற்களுக்கும் கவிதைக்கும் 
வழி இல்லாமல் ....

Sunday, March 10, 2013

உரிமை

உன் காத்திருப்பின் பயனாய் நான் இருந்தேனோ அறியேன்
ஆனால் என் கனவுகளின் உருவமாய் நீ வந்தாய்..
இன்னும் கூட நெஞ்சம் நம்ப மறுக்குதடா
நீ எனக்கு உன் மீது தந்த உரிமைகளை எண்ணி ..

Friday, February 15, 2013

புன்னகை



உன்  சட்டைப்பைக்குள் அதிர்ந்துச் சிணுங்கும்
என் குறுஞ்செய்திகள்
உன் விழியோரம் ஏற்படுத்தும் புன்னகையை கண்டுள்ளேன்
நீ அனுப்பும் பதில் விம்பங்களில் ....

Thursday, February 14, 2013

பாதை


நான்கு கண்களும் கண்டு  தீர்க்கும்,
கனவுகள்  தொடர்ந்துகொண்டே இருக்கின்றன,
பாதையின்  மேடுபள்ளங்களை  முட்களை  தாண்டி,
உயிர்க்காதல் தரும் சக்தியோடு ....
தேவைகள் என்று பலர் ஆயிரம் தேடி செல்ல,
இனி தேடல்கள் இல்லை நமக்கு தீர்வுகள் மட்டுமே தேவை,
நம் பயணத்தின் பாதையை மெருகேற்றிக்கொள்ள ....

Friday, January 25, 2013

அழகு

பல பேர் கண்களிற்கு
தெரியாத அழகு
உன் மனதிற்கு மட்டும்
தெரிந்தது
மாயம் இல்லை
மந்திரமும் இல்லை
இப்பொழுதெல்லாம் என் அழகு
மெருகேறுகின்றது
நீ விரும்பும் பெண்ணாக .... !

Wednesday, November 14, 2012




காற்றில் இன்று உன் ஈரம் 
சாரல்களாய்...........
விரைவில் உன்னை காண வருகின்றேன் என்று 

எழுதிச் செல்கின்றன..........♥

நீ என்னுடன் தான் இருக்கின்றாய்


யாருக்கும் தெரியாது
நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என ...
என் தனிமையில் இருளாக,
எனக்காக காத்துக் கிடக்கும் பாதையாக,
அதிகாலை அலாரமாக,
தினம் தேடும் இசையாக,
என்னை வழிநடத்தும் மனசாட்சியாக.
இன்னும் கூட யாருக்கும் தெரியாது 

நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என... ♥♥♥