உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Friday, April 30, 2010

Thotti Jaya-uyire En uyire

love sad song tamil

Jithan - Kadhaliye Kadhaliye

Thursday, April 29, 2010

எண்ணங்கள்

வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...

எண்ணங்கள்

வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...

Sunday, April 11, 2010

நிலவே


எனக்காக தூது செல்லத்தானே உன்னை நாடினேன் -நிலவே
உனக்குள் ஏன் இத்தனை வஞ்சனை
உன்னை நான் நிலவை கண்டதை விட
அவன் வதனமாய் கண்டது தான் அதிகம்
உன்னில் அவனை கட்டுகிறாய் -ஆனால்
தூது செல்ல மட்டும் மறுக்கிறாய்
என் மனம் அவனுக்கு தான் புரியவில்லை
தினம் தினம் என்னைப்போல் தேய்ந்து வளரும் உனக்குமா
தெரியவில்லை

வழிமொழிவேன்.........


நெஞ்சுக்குள் இன்பம் துன்பம்
இரண்டும் சலனங்களை ஏற்படுத்தும் -ஆனால்
எனக்குள் நிகழ்ந்த ஒரு இனிமையான சலனம்
உன் முதல் பார்வை ...........
என்னால் தான் சொல்ல முடியவில்லை
நீயாவது சொல்வாய் என காத்திருக்கிறேன்
முன்மொழிய தான் முடியவில்லை
வழிமொளியவவது முயற்சிப்பேன் இல்லையா..

Saturday, April 10, 2010

பரீட்சை


இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !

பரீட்சை

இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !

உன்னாலே


ஏனோ என் கடிகாரம் -என்
பேச்சை கேட்க மறுக்கிறது
உன்னை காணும் ஒரு நாள் இருப்பின்
அந்நாளை நோக்கி நக தவிக்கிறது.......

தூக்கத்தை தூக்கில் இட்ட பின் தான்
உன்னை கண்டீர்களா என
என் விழிகளை வினவினேன்
பாவம் அவையே அறிமுறையே இல்லாது -நீ
எப்படி என்னுள் நுழைந்தாய்
என்ற குழப்பத்தில் தவிக்கின்றன.........

சிறை


உன்னை பார்க்கும் -கடைக்கண்
பார்வை சிலநேரம் உன் விழி
பார்த்ததும் ஏனோ என்னிடம்
திரும்ப மறுக்கிறது இப்படியே - நீ
என்னை உன்னையறியாமல் அணு
அணுவாய் சிறைப்பிடிக்கின்றாய் -என்
உயிரே ...................!!

எனக்குள் இருந்த என்னை உணர்த்திய வரிகள்


* நிலவொளியில் தனிமையில் இருக்கிறேன்
எதையோ இழந்தவள் போல் தவிக்கிறேன் காற்று தீண்டும் போது
தான் உணர்கிறேன் இழந்தது என் மனதை என்று................

*தாயை கண்டு உணர்கிறேன் தாய்மையை
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை .............

*காற்றே அவசரம் இல்லை என்னவனை
வேதனைப்படுத்தாது சுவாசமாக மாறிச் செல்
செல்லும் வழியில் அவன் மனதில் நான் இருக்கிறேனா
பார்த்து வந்து சொல்...................

*வாழ்வு உனக்கு சொந்தம் என சுதந்திர எண்ணம் சொல்ல
கண்மூடும் நொடிகூட எனக்கு சொந்தமற்றதாகிவிட்டது - ஏனோ
என் உயிரின் உயில் உன்னிடத்தில் என்பதாலோ .................

அம்மாவுக்கு................

இன்றுவரை நான் ரசிக்கும் அம்மா எனும் கவிதைக்காக என்னால் முடிந்த ஒரு முயற்சி அம்மா உன்னை ராசிக்கா நொடியில்லை எத்தனை அமாவாசைகள் அம்மா உன் பௌர்ணமி முகம் காண கருவறையில் காத்திருந்தேன் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா நீ எனக்காக அற்பணித்தவற்றை........ மழலையில் தாயாய் பிள்ளைப் பருவத்தில் குருவாய் கட்டிளமையில் தோழியாய் இன்றுவரை எனக்காக நீ எடுத்த அவதாரங்கள் எத்தனை எத்தனை ............... நான் கொண்ட செல்லக் கோபங்களின் போது நீ சிரித்து என்னை ஆற்றும் அந்த நொடிக்காக காத்திருந்த நிமிடங்கள் பல கோடி .... போட்டியில் பரிசிழந்து கண்ணீருடன் உன்னை காண ஓடி வரும் போது நீ கட்டும் பரிவிற்கு ஈடு எது அம்மா வேறு பரிசு.... கரு சுமந்து குழந்தை தவமிருந்த உன்னை என்றும் சுமந்து வாழும் அம்மா என் இதயக் கருவறை