உண்மை தான்
இழந்துவிட்டேன் - நான் என்னும்
என்னுள் இருக்கும் ரசனைகளை
கவிதைகளை மட்டுமல்ல
சின்ன செல்ல குறும்புகளையும் தான்
சொல் கோர்வைகள் கவியாய் மாற
அனுமதி கேட்டதில்லை ஒருபொழுதும்
கேட்டு வரும் நிலையிலும் இன்று
பேனா மை காகிதத்தை ஸ்பரிசிக்க மறுக்கின்றதே
என்னை அறிந்த தினக்குறிப்பும்
இன்று என்னை நெருங்க அனுமதிப்பதில்லை
நாள் தோறும் தொலைக்கும் கனவுகள்
தடயமே இன்றி மறைகின்றன
மீண்டும் என்னை நெருங்கி விட கூடாதென்று ....
No comments:
Post a Comment