உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Tuesday, July 3, 2012

என் வெற்றி நீ


உன் அத்தனை கனவுகளிலும்

முதலானவளாய் நான் வேண்டும்
உன் நிறைவேறிய நனவுகளில் ஒன்றாய்

என்றும் இவள் வேண்டும்

காத்திருந்த நொடிகளின்

என் வெற்றி நீ

வேண்டாமடா வேறேதும் - என்றும்

என் நினைவுகளில் நிரம்பியவனாய்

நீ மட்டும் இருந்து விட்டால்

Wednesday, June 20, 2012

கனவுக் காதலன்


என் மௌனத்தின் மொழிகளை
புரிந்து கொண்டது உன் இதயம்
என் கண்களின் தேடலை
முடித்துவைத்தன உன் பிரசன்னம்
என் பயணத்தில் முட்களை
மறைத்து எடுத்தன உன் கைகள்
என் கனவுகளின் நிறத்தை
என்னோட ரசித்தன உன் கண்கள்
ஆனால் இவை அறிந்தும்
உன்னை வதைக்கின்றன என் செயல்கள்
இருந்தும் என்னை தாங்கும் உன் உள்ளங்கைகளுக்கு
என்றும் இவள் அடிமை

Sunday, May 20, 2012

பாடல் வரி


விளையாட்டாக ஒரு பாடல் வரி அவனோட இருக்கையில்
என்னையறியாமல் முனகலாக வெளிப்பட்டது ....
"அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா " என்று
அவன் பதில் நான் சற்றும் எதிர்பாராத கவி வரிகளாக
"கண் என்னடி அடிக்கடி சிமிட்டி உன்னை சிலிர்க்க செய்யும் ,
எந்த சத்தமோ ஒலியோ இல்லாத என் இதயத்தில் ஒரு இடம் .... அல்ல
மொத்தமாகவே தந்துவிட்டேனடி நீ உறங்க " என நீ சொல்லி முடிக்க,
வார்த்தைகள் அல்ல சில துளி கண்ணீர் மட்டுமே விழியோரம் அடைக்கலம் வந்தது

Friday, May 18, 2012

நான் அறியாத உண்மை


காதலில் கற்றுக்கொள்ள
ஒன்றுமே இல்லை
நீ இடாத கட்டளைகளை
நிறைவேற்றுபவளாய் நானும்,
நீ எழுப்பாத கேள்விகளுக்கு
பாதிலாய் என் சொற்களும்,
உன் அனைத்து சொந்தமுமாய்
இடைவெளியின்றி நானும்,
உன்னை முழுவதுமாய் புரிந்தவளாய்
இருந்து விட்டால் ....

Sunday, May 13, 2012

முதல் கோபம்




உன் கோபங்களுக்கு
நான் காரணமாய் அமைந்து விடக்
கூடாதென பல தடவை முயற்சித்திருக்கின்றேன்
ஆனால்
யோசிக்க மறந்த ரணங்கள் கற்றுக்கொடுத்தது
உன் கோபங்களுக்கு அல்ல உன் காயங்களுக்கு
நான் காரணமாய் அமைந்து விடக்கூடாது என்று ....
மன்னிப்பாயா என்னவனே .....

Friday, May 4, 2012

ஸ்மைல் :))))))




ஹே ஹே எங்க ஓட பாக்குற ..... நீ எங்க போனாலும் விட மாட்டேன் ... ஏன்னா நான் பூனைகுட்டி இல்ல மனிதக்குட்டி ... ஹா ஹா ஹா



அடடா என்னை facebook ல tag பண்ண சொன்னத எங்க அண்ணா தப்ப புரிஞ்சுகொண்டானே ....




அட யாரு பா அது... படிக்குற மாதிரி நடிக்குற நேரத்துல குழப்புறது .............

Sunday, April 15, 2012

ஆறுதல்

உன் பிரிவின் ரணங்கள் அன்று வலித்த அளவு
இன்று காய படுத்தவில்லையடா ...
காரணம்...
நீயும் பல தடவை கேட்டிருகின்றாய்
நேற்று வரை நானும் அதற்கான பதிலை
தேடிக்கொண்டு தான் இருந்தேன் 
பார்க்காத பல ஆண்டு பிரிவை விட  இன்று
என்னை தொடு தூரத்தில் தான்
உன் ஸ்பரிசங்கள் என்ற நிதர்சனம்
ஆறுதல் இல்லையா ....
என கண்சிமிட்டு சிரித்தேன் நேற்று
உன் குருஞ்ச்செய்திக்காய்
அழைபெசியை தூக்கிய போது....