என் மௌனத்தின் மொழிகளை புரிந்து கொண்டது உன் இதயம் என் கண்களின் தேடலை முடித்துவைத்தன உன் பிரசன்னம் என் பயணத்தில் முட்களை மறைத்து எடுத்தன உன் கைகள் என் கனவுகளின் நிறத்தை என்னோட ரசித்தன உன் கண்கள் ஆனால் இவை அறிந்தும் உன்னை வதைக்கின்றன என் செயல்கள் இருந்தும் என்னை தாங்கும் உன் உள்ளங்கைகளுக்கு என்றும் இவள் அடிமை
விளையாட்டாக ஒரு பாடல் வரி அவனோட இருக்கையில் என்னையறியாமல் முனகலாக வெளிப்பட்டது .... "அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா " என்று அவன் பதில் நான் சற்றும் எதிர்பாராத கவி வரிகளாக "கண் என்னடி அடிக்கடி சிமிட்டி உன்னை சிலிர்க்க செய்யும் , எந்த சத்தமோ ஒலியோ இல்லாத என் இதயத்தில் ஒரு இடம் .... அல்ல மொத்தமாகவே தந்துவிட்டேனடி நீ உறங்க " என நீ சொல்லி முடிக்க, வார்த்தைகள் அல்ல சில துளி கண்ணீர் மட்டுமே விழியோரம் அடைக்கலம் வந்தது
காதலில் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை நீ இடாத கட்டளைகளை நிறைவேற்றுபவளாய் நானும், நீ எழுப்பாத கேள்விகளுக்கு பாதிலாய் என் சொற்களும், உன் அனைத்து சொந்தமுமாய் இடைவெளியின்றி நானும், உன்னை முழுவதுமாய் புரிந்தவளாய் இருந்து விட்டால் ....
உன் கோபங்களுக்கு நான் காரணமாய் அமைந்து விடக் கூடாதென பல தடவை முயற்சித்திருக்கின்றேன் ஆனால் யோசிக்க மறந்த ரணங்கள் கற்றுக்கொடுத்தது உன் கோபங்களுக்கு அல்ல உன் காயங்களுக்கு நான் காரணமாய் அமைந்து விடக்கூடாது என்று .... மன்னிப்பாயா என்னவனே .....
உன் பிரிவின் ரணங்கள் அன்று வலித்த அளவு
இன்று காய படுத்தவில்லையடா ...
காரணம்...
நீயும் பல தடவை கேட்டிருகின்றாய்
நேற்று வரை நானும் அதற்கான பதிலை
தேடிக்கொண்டு தான் இருந்தேன்
பார்க்காத பல ஆண்டு பிரிவை விட இன்று
என்னை தொடு தூரத்தில் தான்
உன் ஸ்பரிசங்கள் என்ற நிதர்சனம் ஆறுதல் இல்லையா ....
என கண்சிமிட்டு சிரித்தேன் நேற்று
உன் குருஞ்ச்செய்திக்காய்
அழைபெசியை தூக்கிய போது....