உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, April 15, 2012

ஆறுதல்

உன் பிரிவின் ரணங்கள் அன்று வலித்த அளவு
இன்று காய படுத்தவில்லையடா ...
காரணம்...
நீயும் பல தடவை கேட்டிருகின்றாய்
நேற்று வரை நானும் அதற்கான பதிலை
தேடிக்கொண்டு தான் இருந்தேன் 
பார்க்காத பல ஆண்டு பிரிவை விட  இன்று
என்னை தொடு தூரத்தில் தான்
உன் ஸ்பரிசங்கள் என்ற நிதர்சனம்
ஆறுதல் இல்லையா ....
என கண்சிமிட்டு சிரித்தேன் நேற்று
உன் குருஞ்ச்செய்திக்காய்
அழைபெசியை தூக்கிய போது....

Wednesday, April 11, 2012

என் தாய்

எனது வலைப்பூவின் இரண்டாவது பிறந்தநாள் பகிர்வு






நிறமற்ற காகிதத்தில் பென்சில் வரைகோடுகளாக மட்டும் இருந்த
என் வாழ்க்கை ஓவியத்திற்கு நிறம் சேர்க்க
நட்பு வழி கை கோர்த்த என் நண்பனே
உன்னை அறியாமலேயே உன்னில் விழுந்தேன் ...
காதல் என்றறியாமலே கனவில் கலந்தேன் ...
உன்னை விட எந்த சொந்தத்திற்க்காகவும் நான் ஏங்கியதில்லை
என் இரண்டாம் தாயே ....

Tuesday, April 3, 2012

தேடல்


உன்னை பற்றி அறிந்த அளவுக்கு
என்னை பற்றி அறியேனடா...
அதனாலேயே தேடிச் செல்கின்றேன் ஆழமாய்,
இன்னும் இன்னும் உன்னை பற்றி மட்டுமே ....

Sunday, April 1, 2012

நீ கேட்ட நான்


காத்திருந்த நொடிகள் பலவாக இருந்தாலும்
எதிர்பார்த்த சொற்கள் வேறாக இருந்த நாட்கள் அவை ...
என் நண்பனாக அறிமுகமில்லாதவனாய்
எனக்குள் அறிமுகம் தந்தாய்...
நேற்று கடந்த நிகழ்வுகளையும் நாளைக்கான
கனவுகளையும் சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினேன் ...
நீயும் அறியாமல் எனை இழுத்துக் கொண்டாய் ...
நட்பெனும் பாதையில் விரல் கோர்த்து கொண்டேன்
முன்னோடியாக நின்று எனை கூட்டிச் செல்வான் என் நண்பன் என்று...
இந்த உறவை நட்பெனும் கட்டத்திலிருந்து
உயிர் உறவாக மாற்ற அடி எடுத்து வைத்த நாள் ...
என்னை காதலியாக கேட்கவில்லை உன் சொற்கள் ...
உன்னை என் துணைவியாக தருவாயா என்று
நீ கேட்ட நொடி புதிதாக இருந்ததடா ....
புரியாத எண்ணங்களோடு தொலைதூர தேசத்திற்கு
உன்னை பயணிக்க அனுப்பி வைத்தேன் ...
கூடவே என் இதயத்தையும் தான் ....